பொருளுரை பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் பூச்சி மற்றும் நோய்களைப் போன்றே கணிசமான மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் நூற்புழுக்களால் ஆண்டுதோறும் சுமார் 500 கோடி வரையில் பொருளாதார சேதம் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சமீப கா...
பொருளுரை பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் பூச்சி மற்றும் நோய்களைப் போன்றே கணிசமான மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் நூற்புழுக்களால் ஆண்டுதோறும் சுமார் 500 கோடி வரையில் பொருளாதார சேதம் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சமீப காலங்களில் நூற்புழுக்களைப் பற்றியும் அவற்றை கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்தான விழிப்புணர்ச்சி உழவர் பெருமக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆயினும் பயிர்பாதுகாப்பு அறிவியலில் பயிரைத் தாக்கும் நூற்புழுக்களைப் பற்றிய நூல் தமிழ் மொழியில் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டு “தாவர நூற்புழுக்களும் அவற்றின் மோலண்மை முறைகளும் என்ற இந்நூல் தமிழ் மொழியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக, நூற்புழுவியல் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பெருவாரியான உழவர் பெருமக்களுக்குப் பரிச்சயமானதும் தாய்மொழியுமான தமிழில் தயாரிக்கப்பட்ட இந்நூலில் நூற்புழுக்களைப் பற்றிய விபரங்களும் அவற்றைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பம் குறித்தும் விரிவாக விளக்க படங்களுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்நூல் உழவர் பெருமக்களுக்கும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை களப்பணியாளர்களுக்கும், மேல்நிலைப் பள்ளி வேளாண் தொழிற்கல்வி, வேளாண் பட்டய படிப்பு மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் விரைவில் துவக்கப்படவுள்ள வேளாண் தொழில்நுட்பம் பட்டயப்படிப்பு பயில உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்நூலில் கூறப்பட்டுள்ள தொழில் நுட்பம் உழவர் பெருமக்களின் மகசூல் அதிகரிக்கவும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரவும் பெரிதும் வழிவகைசெய்யும் என்று நம்புகிறேன்.